Sunday, July 25, 2010

facebook பாவிக்கப் படியுங்கள்


எல்லோருக்கும் எனது
 
வணக்கங்கள்
இன்றைய நாட்களில் பலர் மத்தியிலும் பிரபல்யம் பெற்ற facebook பல பிரச்சனைகளுக்கு காரணமாக பல நாடுகளில் இருந்துள்ளது என்று என்றோ கேள்விப் பட்டு இருக்கிறோம்.

ஆனாலும் இன்று அந்தப் பிரச்சனை இலங்கைக்கு வந்துள்ளது.
facebook இனால் இற்றைக்கு 50 வரையிலான புகார்கள் இலங்கைப் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப் பட்டு இருப்பதாக பத்திரிக்கை கட்டுரை ஒன்று சொல்லுகிறது.

அதை விட அண்மையில் யாழ்ப் பானத்தில் நடைபெற்ற சில சம்பவங்களும் நீங்கள் கேள்விப் பட்டு இருப்பீர்கள் .

அதைவிட பல பிரச்சனைகளை நானும் பார்த்தும், நெருங்கிய நண்பர்கள் மூலம் கேட்டும் இருக்கிறேன்
இதற்கான காரணத்தை நோக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.
இதனால் அதிகம் பாதிக்கப் படுவது பெண்கள் ஆக இருந்தாலும் ஆண்களும் கூட மிக கவனமாக இருக்க வேண்டிய நிலைமையை வெளி நாடுகளில் இடம் பெற்ற சில சம்பவங்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.

facebook என்பது ஒரு சமூக வலையமைப்பு ஆக இருப்பதனால் பலருக்கு உண்மையில் பிரயோசனமானதாக இருப்பதை இல்லை என்று சொல்ல முடியாது.


ஆனாலும் இணையங்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் எதையும் எப்பவும் ஆராய்ந்ததும் பின்விளைவுகளை யோசித்தும் உருவாக்கியதை கட்டுப் படுத்தத் தெரிந்துமே இணையத்தில் எவ் வேலைகளையும் செய்ய வேண்டும்.

ஏனெனில் இணையம் பற்றி உங்களுக்கு சொல்லத் தேவை இல்லை
அதை எப்படிக் கட்டுப் படுத்தினாலும்
எங்கு எதை தடை செய்தாலும்
அவற்றை எல்லாம் சென்று பார்க்க பல வலைத் தளங்கள் இன்றும் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
இதெல்லாம் ஏன்?
நீங்களே சிலவேளை அவ்வாறான இணையத்தளங்களைப் பயன் படுத்தி இருக்க கூடும் .



facebook பற்றி இன்று எழுந்திருக்கும் இந்தப் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன
சுருக்கமாகச்சொன்னால்
முதலில் இணையம் பற்றி நன்கு அறிய வேண்டும்
பின்பு facebook பற்றி நன்கு அறிய வேண்டும்
அதன்பின்பு தான் அதில் கணக்கு ஒன்றை ஆரம்பிப் பாத்து நல்லது என்பதே நான் சொலக் கூடியது.
இன்று
எனக்குத் தெரிந்த வரையில்
பலர்
இணையம் பற்றி தெரியாது facebook கணக்கு ஆரம்பித்து உள்ளனர்.



எனது அனுபவம் ஒன்றை இங்கு தருகிறேன்...
ஒருநாள் என்னிடம் ஒரு நபர் கேட்டார்
"மச்சான் ஒரு facebook கணக்கு தொடங்க வேண்டும் எப்படி" என்று!
நான் அதற்கென்ன என்று அவரை அழைத்துக் கொண்டு சென்று mail address என்ன என்று கேட்ட போது தான் தெரியும் அவருக்கு mail address இல்லாதது மட்டுமல்ல இணையம் பற்றியோ கணணி பற்றியோ பூரண அறிவு இல்லை !.
ஆனாலும் பல காரணிகள் அவருக்கு அந்தப் facebook கணக்கை ஆரம்பிக்கத் தூண்டி இருந்தமை பின்பு எனக்குத் தெரிய வந்தது .

ok என்று மெயில் ஒன்று உருவாக்கி facebook கணக்கும் உருவாக்கிய போது அவர் என்னிடம் கேட்ட அடுத்த கேள்வி
"எப்படி போட்டோ போடுவது "
நான் கேட்டேன் "ஏன்" என்று
இல்லை சும்மா போடலாம் தானே என்றார்.



உண்மையில் பிரச்சனை இங்குதான் எழுகிறது
facebook பாவிக்கும் போது கணக்கு ஆரம்பிக்கத் தொடங்குவது முதல் நாம் அங்கு கேட்கும் கேள்விகளுக்கு ஒழுங்காக விடை அளிக்க வேண்டும்
மிக முக்கியமாக கணக்கு ஆரம்பிக்க முதல் facebook Account setting பற்றி ஒழுங்காக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
உண்மையான தகவல்களை வெளியிடுவது
புகைப் படங்களை வெளியிடுவது
நண்பர்களை இணைப்பது
chat பண்ணுவது பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

உங்கள் விபரங்கள் புகைப் படங்கள் போன்றவற்றை யார் யாருடன் பகிர்ந்து கொள்ளப் போகிறீர்கள் பற்றி தெளிவாக setting செய்து கொண்ட பிறகே புகைப் படங்களை வெளியிட முயற்சிக்க வேண்டும்.

மொத்தத்தில் facebook பற்றி முதலில் நன்கு படிக்க வேண்டும்...
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான் ...



-அன்புடன்
-kana-