Wednesday, February 24, 2010

வாழ்த்துக்கள்



25.02.2010 
 வியாழக் கிழமை 
  நடைபெறும் 
பேராதனைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்
 பட்டம் பெற இருக்கும் அனைவருக்கும்
 எனது இனிய வாழ்த்துக்கள்


படித்தீர்
பல்கலை  வந்தீர்
பல கலை  கற்றீர்
பட்டம் பெற்றீர்
பாரெங்கும் மேலோங்க
பாராட்டி வாழ்த்துகிறேன்.

  என்றென்றும் அன்புடன்

Tuesday, February 23, 2010

அன்பான நண்பர்களே!

அன்பான நண்பர்களே!


வளர்ந்து வரும் தொழில் நுட்பம் என்று தலைப்பிட்டு வம்பில்லாமல் நான் எழுதிய (இல்லை சுட்டு வெளியிட்ட) சிலது உங்களுக்கு கசப்பாகி விட்டது !

அடிக்கடி காணும் நண்பர்களும் இடைக்கிடை வரும் தொல்லை பேசிகளும் தெரிவித்தன

சினிமா கிசுகிசுக்கள், சிறுசுகள் சில சீரழிந்த கதைகள், விளையாட்டு விந்தைகள், வீணாப்போன அரசியல் எழுதி வெளியிட்டால் நல்லாக இருந்திருக்கும்

இல்லையா !!!!!!!!!

நானும் தான் யோசித்தேன்

நாலு பேர் பார்ப்பார்கள்

குசும்பாக இருக்கும்
குறிப்பிட்டளவு குறிப்புரை வரும்
சினிமா கிசுகிசுக்கள், சிறுசுகள் சில சீரழிந்த கதைகள், வீணாப்போன அரசியல் எனக்கும் தேடிப்பார்க்க ஆசை தான் ஆனாலும் விளைவு ?????

இதனால் என்ன பயன் என சிந்தித்தேன்

அதுதான் விட்டு விட்டேன்.

எனக்கும் உங்களில் பலருக்கும் பொதுவான சிலவற்றை பிரதியிட்டால்!!!!!!!!!!

விளைவு??

கணா உன் தொல்லை தாங்க  முடியல்லைடா !!!!!~~~~~~
 
நண்பர்களே உங்கள் தொல்லையும் தாங்க முடியல்லை .........
 

Saturday, February 20, 2010

புவிசார் நிலைகாண் தொகுதி (GPS)

உயிர்வாழும் கிரகம் (Living Planet) என்றறியப்படும் பூமியில் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியென்பது அவற்றின் இடப்பெயர்ச்சி முலமாகவே சாத்தியமாயிற்று. மனிதகுலத்தின் நாகரீகம் மனிதர்களின் இடப்பெயர்ச்சி மூலமாகத்தான் வளர்ச்சிபெற்றது. தொடக்க காலத்தில் கால்போன போக்கில் இடம்விட்டு இடம் நகர்ந்த மனிதன் அவனது தேவைகளும் அறிவும் வளர்ந்தபோது தன்னுடைய இடப்பெயர்ச்சியை இலகுவாக்குவதற்கான வழிவகைகளைத் தேடத் தொடங்கினான்.

காடுகளிலுள்ள பெருமரங்கள், நீர்நிலைகள், சிற்றோடைகள், பெருநதிகள், மலைகள், பறவை மற்றும் விலங்குகளின் அசைவியக்கங்கள், நட்சத்திரங்கள் எனத் தன்னுடைய நகர்வுகளுக்கும் பயணங்களுக்கும் இயற்கையை நம்பியிருந்த, இயற்கையைப் பயன்படுத்திக்கொண்ட மனிதன் தன்னுடைய அறிவின் திறன்கொண்டு தனக்கு வழிகாட்டுவதற்காக உருவாக்கிய கருவிதான் இந்த புவிசார் நிலைகாண் தொகுதி (Global Positioning System). பல்வேறு தேவைகளுக்காகப் பல்வேறுபட்ட கருவிகளை உருவாக்கிய மனிதனின் அறிவுக்குழந்தையான இந்த புவிசார் நிலைகாண் தொகுதி மனிதனை அவனது சரியான பயணப்பாதையில் அழைத்துச்செல்கின்றது.

தற்காலப் பயன்பாட்டிலுள்ள நவீன போக்குவரத்து ஊர்திகளில் வழிகாட்டும் தொகுதி (Navigation System) என்பது ஓர் இன்றியமையாத கருவியாகிவிட்டது. நாம் போகவேண்டிய இடத்தின் முகவரியை வழிகாட்டும் கருவியினுள் உள்ளீடு செய்ததும், நாம் பயணிக்கவேண்டிய பாதையினைத் திரையில் தோன்றும் வரைபடத்திற் குறித்துக் காட்டுவதுடன் நமது பயணத்தின்போது வீதியில் எமது நகர்வினையும் தொடர்ந்து குறித்துக்காட்டும் வேலையினையும் இக்கருவி செய்கின்றது. இச்செயற்பாடுகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதையும் அவற்றின் பின்னணி மற்றும் வரலாறு என்பவற்றையும் இங்கு மேலோட்டமாகப் பார்ப்போம்.

GPS என்று சுருக்கமாக அழைக்கப்படும் இப் புவிசார் நிலைகாண் தொகுதியானது, வானவெளியில் வலம்வந்துகொண்டிருக்கும் அமெரிக்க நாட்டுக்குச் சொந்தமான ஒரு தொகுதி செய்மதிகளின் துணையுடன் இயங்குகின்றது. இத்தொகுதியானது புவியிலோ அல்லது புவியை அண்மித்த வான்பரப்பிலோ அமைவிடம் மற்றும் நேரம் போன்ற தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பயன்படுத்தப்படுவதுடன் வழிகாட்டும் செயற்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இக்கருவியானது புவியின் காலநிலை மாற்றங்கள் மற்றும் இரவு பகல் போன்றவற்றால் பாதிக்கப்படாது செயற்படவல்லது.

புவிசார் நிலைகாண் தொகுதியின் செயற்பாடானது பிரதானமாக பின்வரும் மூன்று கட்டமைப்புக்களைக் கொணடிருக்கின்றது.

1. 24 தொடக்கம் 32 வரையிலான வழிகாட்டும் செய்மதிகள் (Navigation Satellites)
2. புவியின் நான்கு அமைவிடங்களில் அமைந்திருக்கும் செய்மதிக் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு நிலையங்கள் (Control and monitoring stations)
3. பாவனையாளருக்கு வழிகாட்டும் GPS அலைவாங்கிக் கருவி (GPS receiver)

வழிகாட்டும் செய்மதிகளால் வானவெளியிலிருந்து அலைபரப்பப்படும் மின்காந்தச் சமிக்கைகள் GPS அலைவாங்கியினால் உள்வாங்கப்பட்டு புவிநிலைப் புள்ளியான அகலாங்கு (latitude), நெட்டாங்கு (longitude) மற்றும் கடல்மட்ட உயரம் (altitude) என்பவற்றுடன் நேரமும் (time) கணிப்பிடப்படுகின்றன. 1995 April மாதத்தில் முழுமையான செயற்பாட்டு நிலையை எட்டியபின்னர், இத்அதாகுதியின் பயன்பாடானது உலகில் பரந்துபட்டளவில் விரிவடைந்தது. உலகளாவிய வழிகாட்டும் செயற்பாடடின் பிரதான பாத்திரத்தை இத்தொகுதி பெற்றுக்கொண்டது. அத்துடன் மட்டுமல்லாது வரைபட உருவாக்கம், நில அளவை, வர்த்தகம், விஞ்ஞானச் செயற்பாடுகள், அத்தோடு வாகனம் மற்றும் நபர்களைப் பின்தொடர்தல் போன்ற செயற்பாடுகளிலும் இத்தொகுதி பயன்படுத்தப்படுகின்றது. இத்தொகுதியின் அணுக்கடிகாரத்தின் மூலமான துல்லியமான நேரக்கணிப்பீடானது நிலநடுக்கம் தொடர்பான விஞ்ஞான ஆய்வு மற்றும் கைத்தெலைபேசி போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

தரை, கடல் மற்றும் வான் வழிகாட்டற் செயற்பாட்டில் GPS ஆனது பிரதான கருவியாக இடம்பிடித்துள்ளது. இடர்கால மீட்புப்பணி மற்றும் அவசரகாலப் பணி என்பவற்றில இதன் பங்களிப்பானது அளப்பரியது. GPS கருவியின் துல்லியமான நேரக் கணிப்பீடானது எமது நாளாந்தச் செயற்பாடுகளான வங்கி, கைத்தொலைபேசிச் சேவை மற்றும் மின்னிணைப்பு என்பவற்றில் பயன்படுத்தப்படுகின்றது.

ஐக்கிய அமெரிக்கக் கடற்படையால் பயன்படுத்தப்பட்ட உலகின் முதலாவது வழிகாட்டற் செய்மதித் தொகுதியானது 1960 ஆம் ஆண்டில் பரீட்சிக்கப்பட்டது. அண்ணளவாக மணித்தியாலத்திற்கு ஒரு தடவை என்ற அளவில் புவிநிலைப் புள்ளிகளுக்கான (fix) தரவுகளைத் தரவல்ல இந்த வழிகாட்டல் தொகுதி ஐந்து செய்மதிகளைக் கொண்டது. 1967 இல் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட Timation எனப் பெயரிடப்பட்ட செய்மதியே முதன்முதலில் விண்வெளியில் - இன்றைய புவிசார் நிலைகாண் தொகுதியில் பயன்படுத்தப்படும் தொழிநுட்பத்திலமைந்த - துல்லியமிக்க நேரக்கணிப்புக் கருவியைக் கொண்டிருந்தது.

1940 களின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டு இரண்டாம் உலகப்போர் காலத்திற் பயன்படுத்தப்பட்ட LORAN மற்றும் Decca Navigator ஆகியவற்றை இவ் வழிகாட்டற் தொகுதியின் முன்னோடியாகக் கொள்ளமுடியும். இவற்றில், புவியில் நிலையாக அமைக்கப்பட்ட நிலையங்களிலிருந்து அலைபரப்பப்பட்ட சமிக்கைகள் பிறிதொரு கருவியினால் உள்வாங்கப்பட்டு அக்கருவியின் அமைவிடம் கணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1957 இல் சோவியத் ஒன்றியத்தினால் விண்ணில் செலுத்தப்பட்ட உலகின் முதற் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் (Sputnik), அதன் மின்காந்த அலைகளைக் கண்காணிக்கும் பணியிலீடுபட்ட அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவொன்றிற்கு செய்மதியினைப் பயன்படுத்திப் புவிசார் நிலைகாண் தொகுதியினை வடிவமைக்கும் எண்ணக்கருவை ஏற்படுத்தியது.

இப்போது GPS அலைவாங்கிக் கருவி ஒன்று எவ்வாறு புவிநிலைப் புள்ளியினைக் கணிப்பிடுகின்றது என்பதனைப் பார்ப்போம்.

ஒரு GPS அலைவாங்கியானது விண்வெளியில் வலம் வந்துகொண்டிருக்கும் வழிகாட்டல் தொகுதிச் செய்மதிகளிலிருந்து (Navigation Satellite) கிடைக்கும் சமிக்கைகளை உள்வாங்கி அச்சமிக்கைகளின் நேரத்தினைக் கணிப்பிடுவதன் மூலம் அமைவிடத்தைக் கண்டறிகின்றது. ஒவ்வொரு வழிகாட்டல் தொகுதிச் செய்மதியிலிருந்தும் அனுப்பப்படும் சமிக்கைகள் பின்வரும் மூன்று தகவல்களை உள்ளடக்கியதாகக் காணப்படும்.

1. செய்மதியிலிருந்து தகவல் அனுப்பப்பட்ட நேரம்

2. செய்மதிச் சுற்றுவடட்டப் பாதையில் செய்மதியின் அமைவிடம்

3. தொகுதியின் செயற்றிறன் மற்றும் தொகுதியிலுள்ள ஏனைய செய்மதிச் சுற்றுவட்டப்பாதையின் அண்ணளவான தகவல்கள்



உள்வாங்கப்படும் சமிக்கையிலுள்ள நேரத் தகவல்களைக் கொண்டு GPS அலைவாங்கியானது குறித்த சமிக்கையை அனுப்பிய செய்மதியின் அமைவிடத்தைக் கணிப்பிடும். இவ்வாறு பல செய்மிதிகளிலிருந்து கிடைக்கும் சமிக்கைகளின் மூலம் அச்செய்மதிகளின் அமைவிடத்தைக் கணிப்பிட்டு கிடைக்கும் தரவுகளைக் கேத்திரகணிதக் கணிப்பீட்டுக்கு உட்படுத்துவதன் மூலம் அலைவாங்கியானது அதனது அமைவிடத்தைக் கண்டறிகின்றது. இவ்வாறு கணிப்பிடப்படும் அமைவிடம் எண்களாகவோ அல்லது வரைபடம் ஒன்றின்மீதோ பாவனையாளருக்குக் குறித்துக்காட்டப்படுகின்றது. மேலே சுட்டிக்காட்டப்பட்டது போன்று பொதுவாக புவிநிலைப் புள்ளிகள் புவியின் மேற்பரப்பு அமைவிடத் தகவல்களான அகலாங்கு, நெட்டாங்கு மற்றும் கடல்மட்ட உயரம் என்பவற்றைக் கொண்டிருக்கும். வாகனங்களில் பயணிக்கும்போது GPS அலைவாங்கிகள் பயணிக்கும் வேகத்தினையும் கணிப்பிடவல்லதாக இருக்கும்.

வாகனத்தில் பயணிக்கும்போது புவிநிலைப் புள்ளிகள் தொடர்ச்சியாக மாற்றமடைந்த வண்ணமிருக்கும். இவ்வாறு புள்ளிகள் மாற்றமடையும்போது இருவேறு புள்ளிகளைக் கணிப்பிடுவதற்கான நேர இடைவெளியை அடிப்படையாகக் கொண்டே அலைவாங்கித் தொகுதியின் வேகம் கணிப்பிடப்படுகின்றது.

GPS இன் முழுமையான கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்புப் பணிகள் அமெரிக்காவினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. யுத்த காலங்களில் தமது இராணுவச் செயற்பாட்டிற்கு எவ்வித பாதிப்புமின்றிக் குறித்த பிரதேசங்களிற்கோ அல்லது முழுமையாகவோ GPS செயற்பாட்டை முடக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ அமெரிக்காவினால் முடியும்.

GPS அலைவாங்கிக் கருவி ஒன்று புவிநிலைப் புள்ளியினைக் கணிப்பதற்கு குறைந்தபட்சம் மூன்று செய்மதிகளின் சமிக்கைகளை உள்வாங்க வேண்டும். இருப்பினும், மின்காந்த அலைகளின் வேகம் காரணமாக, நேரத் தரவினில் காணப்படும் சிறியதொரு வழுகூட புவிநிலைப் புள்ளியினைக் கணிப்பதில் பாரிய வழுவினை ஏற்படுத்திவிடும். இதன்காரணமாக GPS அலைவாங்கிகள் நான்கு அல்லது நான்கிற்கு மேற்பட்ட செய்மதிகளிலிருந்து தகவல்களைப் பெற்றே புவிநிலைப் புள்ளிகளைக் கணிப்பிடுகின்றன.

அடிப்படையில் இராணுவப் பயன்பாட்டிற்கென ஊருவாக்கப்பட்ட இந்தப் புவிசார் நிலைகாண் தொகுதியானது இன்று பொதுமக்கள் பயன்பாட்டிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இத்தொகுதியின் செயற்பாடானது பரிச்சயமற்ற பிரதேசங்களினூடான நகர்வுகள், மீட்பு நடவடிக்கைள் மற்றும் அதிரடித் தாக்குதல்களிற்கான தரையிறக்கங்கள் போன்றவற்றினை இலகுவாக்கியுள்ளது. அத்தோடு இக்கருவி கட்டளையதிகாரிகளின் மின்னணு உதவியாளர் (Commanders Digital Assistant) என்றோ போர்வீரர்களின் மின்னணு உதவியாளர் (Soldiers Digital Assistant) என்றோ அழைக்கப்படுகின்றது. இதுமட்டுமன்றி இலக்குக்களைப் பின்தொடர்தல் (Target Tracking), ஏவுகணைகளை வழிநடத்துதல் (Missile Guidance) போன்ற செயற்பாடுகளிலும் இத்தொகுதியின் பங்கு அளப்பரியது.


GPS கருவியின் பொதுமக்கள் பயன்பாட்டை எடுத்துக்கொண்டால், வரையறுக்க முடியாதளவுக்கு அதன் பயன்பாடு நாளாந்தம் வளர்ச்சியடைந்த வண்ணமுள்ளது. கண்டுபிடிப்பாளர்களின் கற்பனா சக்திக்கேற்ப புதிய புதிய வசதிகள் நாளாந்தம் GPS கருவியிற் புகுத்தப்பட்டவண்ணமுள்ளன. கைத்தெலைபேசி, ஓளிப்படக் கருவி (Camera), கைக்கடிகாரம் (Watch) மற்றும் உணரிகள் (Sensors) என GPS இன் பயன்பாடு புதிய வடிவங்களிற் புகுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

GPS கருவியின் உதவியுடனான உல்லாசப் பயணம் என்பது பொதுப்பயன்பாட்டில் இக்கருவியின் பயன்பாட்டிற்கான ஓரு சிறந்த உதாரணம். GPS தொழிநுட்பத்தின் அசுர வளர்ச்சி, மனிதர்களால் வழங்கப்பட்டுவந்த உல்லாசப் பயணிகளுக்கான வழைகாட்டும் சேவையினை (Tourist Guide Service) இப்போது ஒரு GPS இன் துணையுடன் பெற்றுக்கொள்ள வழிவகுத்துள்ளது. இக்கருவியானது உல்லாசப் பயணிகளுக்கு வழிகாட்டுவதுடன் ஒவ்வொரு பார்க்கப்பட வேண்டிய இடத்தை அடைந்ததும் அவ்விடம் தொடர்பான தகவல்களைப் பயணிகளுக்கு வழங்குகின்றது. மனித அறிவுடன் ஒப்பிடும்போது இவற்றின் பயன்பாடு வரையறுக்கப்பட்டவையாகவே இருக்கின்ற போதிலும், தொழிநுட்பத்தின் அசுர வளர்ச்சி எதையும் சாத்தியமாக்கும் நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது என்பது மறுக்கப்படமுடியாதது.

முழுமையான புவிசார் நிலைகாண் மற்றும் வழிகாட்டல் தொகுதி ஒன்று, விண்வெளித் தொகுதி (space Segment), கட்டுப்பாட்டுத் தொகுதி (control segment) மற்றும் பயனர் தொகுதி (user segment) என மூன்று உப தொகுதிகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

விண்ணில் வலம்வந்தநண்ணமிருக்கும் 24 வழிகாட்டற் செய்மதிகளைக்கொண்ட தொகுதியே விண்வெளித் தொகுதி என்றழைக்கப்படுகின்றது. ஆரம்பத்தில், ஒவ்வொன்றிலும் எட்டு செய்மதிகள் மூலம் மூன்று சுற்றுவட்டப்பாதையில் சுற்றக்கூடியவாறே இந்த இருபத்திநான்கு செய்மதிகளைக் கொண்ட தொகுதி வடிவமைக்கப்பட்டது. பின்வந்த நாட்களில் ஒவ்வொன்றிலும் நான்கு செய்மதிகள்மூலம் ஆறு சுற்றுவட்டப்பாதையில் சுற்றக்கூடியவாறு இத்தொகுதி மாற்றியமைக்கப்பட்டது. புவியின் எப்பகுதியிலிருக்கும் ஒரு GPS அலைவாங்கியானது எப்போதுமே ஆறு செய்மதிகளின் தொடர்பினைக் கொண்டிருக்கக்கூடியவாறு இந்தச் செய்மதிச் சுற்றுவட்டப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அண்ணளவாகப் புவிமேற்பரப்பிலிருந்து 22200 கிலோமீற்றர் உயரத்தில் 26600 கிலோமீற்றர் ஆரையுடைய சுற்றுவட்டப்பாதையில் புவியை மையமாகக்கொண்டு சுற்றிவரும் இச்செய்மதிகள் ஒவ்வொன்றும் புவிநாளொன்றிற்கு (sidereal day – ஒரு புவிநாள் என்பது அண்ணளவாக 23 மணித்தியாலங்கள், 56 நிமிடங்கள், 4091 விநாடிகள் ஆகும்) இரண்டு தடவைகள் புவியைச் சுற்றுவதுடன் குறித்த ஒரே புவிமேற்பரப்பிற்கே தொடர்ச்சியாகத் தகவல்களை வழங்குகின்றன.

செய்மதிகளைக் கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் புவியிலமைந்துள்ள நிலையங்களே கட்டுப்பாட்டுத் தொகுதி என்றழைக்கப்படுகின்றன. செய்மதிகளின் சுற்றுவட்டப் பாதைகள் தேசிய புவியியல் முகவர் நிலையத்துடன் (National Geographical-Intelligence Agency) இணைந்து அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான கண்காணிப்பு நிலையங்களால் கண்காணிக்கப்படுகின்றன. கண்காணிப்பின்மூலம் பெறப்படும் தகவல்கள் அமெரிக்க விமானப்படையின் விண்வெளிக் கட்டளை மையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வழிகாட்டற் செய்மதிகளுக்கான கட்டளைகள், தகவல்கள் வழங்கப்படுவதுடன் வழுத்திருத்தச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

செய்மதிகளில் ஏற்படும் பழுதுகள் கண்காணிப்பு நிலையங்களாற் கண்காணிக்கப்பட்டு நிவர்த்திசெய்யப்படுகின்றன. ஒரு செய்மதியின் பழுதுகள் நிவர்த்திசெய்யப்பட முடியாதபோதோ அல்லது அதன் ஆயுட்காலம் முடிவடையும்போதோ அச்செய்மதி அதன் சுற்றுவட்டப் பாதையிலிருந்து வெளியேற்றப்படுவதோடு வேறொரு செய்மதி பிரதியீடான குறித்த சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பப்படுகின்றது. இவை தவிர்ந்த வேறு காரணங்களுக்காகவும் செய்மதிகள் சுற்றுவட்டப்பாதையிலிருந்து வெளியேற்றப்படலாம். சுற்றுவட்டப்பாதையிலிருந்து வெளியேற்றப்பட்ட செய்மதி “பயன்பாடற்றதாக” அடையாளப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட செய்மதியிலிருந்து கிடைக்கும் சமிக்கையினை GPS அலைவாங்கிக் கருவி கணிப்பீட்டுச் செயற்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளாது புறக்கணித்துவிடும்.

GPS அலைவாங்கிக் கருவியே பயனர் தொகுதி என்றழைக்கப்படுகின்றது. இக்கருவி செய்மதியிலிந்து கிடைக்கும் சமிக்கையை உள்வாங்கி பயனருக்கான தகவல்களை வழங்கும் செயற்பாட்டைச் செய்கின்றது. அக்கருவிகளின் பயனருக்கான தகவல் வெளியீடானது கருவியின் வடிவமைப்பிற்கேற்ப மாறுபட்டுக் காணப்படலாம். அதாவது சில கருவிகள் புவிநிலைப் புள்ளியினை இலக்கங்களாகவும் வேறு சில கருவிகள் புள்ளியினை வரைபடத்திற் குறித்தோ பயனருக்கு வெளியிடலாம். எவ்வாறாயினும் இக்கருவிகளின் உள்ளகக் கணிப்பீட்டுக் செயற்பாடுகள் ஒன்றாகவே காணப்படும்.

இந்தப் புவிசார் நிலைகாண் தொகுதியின் முழுமையான கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்புப் பணிகள் ஐக்கிய அமெரிக்காவினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இத்தொகுதியின் செய்மதிகள் அடிப்படையில் இராணுவ மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கென இருவேறு விதமான சமிக்கைகளை வழங்கவல்லன. யுத்த காலங்களில் தமது இராணுவச் செயற்பாட்டிற்கு எவ்வித பாதிப்புமின்றிக் குறித்த பிரதேசங்களிற்கோ அல்லது முழுமையாகவோ வழிகாட்டற் தொகுதிகளின் செயற்பாட்டை முடக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ அமெரிக்காவினால் முடியும். இதுபோன்ற காரணங்களிற்காக பல்வேறு நாடுகள் தமது நாட்டுக்கெனவும் உலகளாவிய ரீதியிலும் பல்வேறு வழிகாட்டற் தொகுதிகளைப் பரிந்துரைத்து அவற்றை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட தொகுதிகள் வருமாறு.

• Galileo – ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில நாடுகளின் கூட்டமைபில் உருவாக்கப்படும் இத்தொகுதியினை 2013 ஆம் ஆண்டளவில் முழுமையான பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது

• Beidou – சீன மக்கள் குடியரசினால் உருவாக்கப்பட்ட உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான தொகுதி

• COMPASS – சீன மக்கள் குடியரசினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள உலகளாவிய பயன்பாட்டிற்கான வழிகாட்டும் தொகுதி

• GLONASS - இரஸ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள உலகளாவிய வழிகாட்டும் தொகுதி

• IRNSS - இந்தியாவால் உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான வழிகாட்டும் தொகுதி. இத்தொகுதியினை ஆசிய மற்றும் இந்துசமுத்திரப் பிராந்தியங்களிலும் பயன்படுத்தமுடியும்

• QZSS – ஜப்பான் நாட்டினாற் பரிந்துரைக்கப்பட்டுள்ள உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான வழிகாட்டல் தொகுதி


நன்றி
http://eelanation.com/ariviyal-pakuthi/40-pothu-kalvi/199-gps-introduction.html

Thursday, February 18, 2010

முதலுதவி

முதலுதவி என்பது தீடீர் விபத்து அல்லது நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு வைத்திய உதவி கிடைக்கும் வரை சுற்றுச் சூழலில் உள்ளவற்றைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட விதத்தில் நிபுணத்துவமான உதவியை வழங்குதாகும்

இது எல்லோருக்கும் எப்போதும் தேவைப்படாது ஆனால் தேவைப்படும் நேரத்தில் தெரியாது விட்டல் மிகவும்  கவலைப்பட  வேண்டி ஏற்படும்
முதலுதவி செய்யமுன் கவனிக்க வேண்டியவை
  1. முதலுதவியாளர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
  2. சுற்றுச் சூழலை அவதானித்துப் பாதுக்காப்பை உறுத்திப்படுத்தல்.
  3. நோயாளருக்கு உதவியளித்தல்.

முதலுதவியின் நோக்கங்கள்
  1. உயிரைப் பாதுகாத்தல்.
  2. நிலமை மோசமடையாமல் தடுத்தல்.
  3. குணமடைய முன் ஏற்பாடு செய்தல்.  

 அடிப்படை முதலுதவிக் குறிப்புகள
  1. முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.
  2. முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.
  3. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.
  4. அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
  5. பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.
  6. பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒருசாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.
  7. முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்
  8. அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனதைரியத்தை அளிக்க வேண்டும்
  9. பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.
  10. பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


வெட்டுக்காயங்களுக்கான முதலுதவி
  1. காயம்பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவிவிட வேண்டும்.
  2. இரத்தம் நிற்கும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  3. காயத்தைக் கட்டுவதற்று சுத்திகரிக்கப்பட்ட பேண்டேஜ் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.
  4. ஆழமான காயமாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

சிறுகாயங்கள் மற்றும் சிராய்ப்புகள்
  1. வெதுவெதுப்பான நீரில் சோப்பினால் காயத்தினை நன்றாக கழுவ வேண்டும்.
  2. இரத்தக்கசிவு இருப்பின் சுத்தமான பேண்டேஜ் துணியினால் காயத்தினைக் கட்ட வேண்டும். இது காயத்தின் மீது தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கிறது.


தொற்று ஏற்பட்ட காயத்திற்கான அறிகுறிகள்
  1. காயத்தின் மீது வீக்கம்.
  2. காயம் சிவந்து காணப்படுதல்.
  3. வலி.
  4. காய்ச்சல்.
  5. காயத்தில் சீழ்பிடித்தல்

மூச்சுத்திணறல்
மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட நபர் இருமினால் உடனடி ஆபத்தான நிலையில் இல்லை என்று கருதலாம். அவ்வாறு இருமும் போது, தொண்டையில் அடைத்துள்ள பொருள் வெளியே வராமலிருந்தால், சிரமத்துடன் மூச்சு விடும் நிலை நீடித்தால், பாதிக்கப்பட்ட நபரின் உடல் நீலநிறமாக மாறுவதுடன் மூச்சுத்திணறலின் அறிகுறிகள் இருப்பின், அந்நபரிடம் மூச்சுத்திணறலினால் பாதிப்பு இருக்கிறதா என்பதை கேட்டறிதல் அவசியம். பாதிக்கபபட்ட நபரால் பேசமுடியாத நிலையிலும் அவரால் தன் தலை அசைத்து பதிலுரைக்க முடியும். இவ்வாறு கேட்பது மிக முக்கியம். ஏனெனில் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நபருக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருக்கும், ஆனால் அவரால் பேச இயலும்.

பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் அழைத்து செல்வதில் தாமதம் செய்யக்கூடாது.



மயக்கம் ஏற்படுதல்

அறிகுறிகள்
மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும்.
  1. தலை கனமில்லாமல் இலேசாக இருப்பது போன்ற உணர்வு
  2. சோர்வு
  3. வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு
  4. தோல் வெளுத்துக் காணப்படுதல்.
முதலுதவி
மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது

  1. முன்புறமாக சாய வேண்டும்
  2. தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக் கொள்ள் வேண்டும். தலையானது இதய பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும் போது

  1. பாதிக்கப்பட்ட நபரின் தலை குணிந்தும், கால்களை உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.
  2. இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும்.
  3. குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.
  4. மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால், பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிகச் சிறந்தது.


வலிப்பு
வலிப்பு என்பது திடீரென ஒருவரின் உணர்வில்லாமல் ஏற்படக்கூடிய திசுக்களின் சுருங்குதல் ஆகும். திடீரென ஏற்பட்ட உடல்நலக் கேட்டினாலோ அல்லது "எபிலப்சி" என்ற நோயினாலோ ஓருவருக்கு வலிப்பு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட நபரின சுவாசம் நின்று போகும் தருவாய் ஏற்பட்டால், ஆபத்தான நிலையாகும். இது போன்ற தருணங்களில் மருத்துவரின் உதவி அத்தியாவசியமான ஒன்றாகும்.

அறிகுறிகள
  1. உடல் தசைகள் இறுக்கமாகவும் கடினமாகவும் மாறுவது, பின் உடலில் உதறுவது போன்ற அசைவுகள்.
  2. நோயாளி தனது நாக்கினை கடித்துக் கொள்ளக் கூடும் அல்லது சுவாசிப்பதை நிறுத்தி விடக் கூடும்.
  3. முகம் மற்றும் உதடு போன்றவை நீலநிறமாக மாறிவிடுதல்.
  4. சில சமயங்களில் அதிகமான உமிழ்நீர் அல்லது நுரை வாயிலிருந்து வெளியாகுதல்.

முதலுதவி
  1. பாதிக்கப்பட்ட நபரின் அருகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தலைக்கு அடியில் மென்மையான ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.
  2. நோயாளிகளின் பற்களுக்கு இடையிலோ அல்லது வாயிலோ எத்தகைய பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
  3. எத்தகைய திரவ உணவுப் பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
  4. மூச்சு இழக்க நேரிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் சுவாச பாதையில் அடைப்பு உள்ளதா என்று பார்ப்பதுடன், நல்ல காற்றோட்ட வசதி செய்ய வேண்டும்.
  5. மருத்துவ உதவி கிடைக்கும் வரை பரபரப்பு இல்லாத அமைதியான சூழலை பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.
  6. பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர் வலிப்பு நின்றவுடன், மயக்க நிலை அல்லது மீண்டும் வலிப்பினாலோ பாதிக்கப்படக்கூடும்.
  7. முடிந்த வரையில் உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.


வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு
  1. வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை உடனடியாக குளிர்விக்க வேண்டும்.
  2. முடிந்தால் பாதிக்கபபட்ட நபரை குளிர்ந்த நீரில் இடலாம். மேலும் குளிர்ந்த ஈரமான துணியால் உடலைப் போர்த்தி விடலாம். ஐஸ் கட்டியினால் ஒத்தடம் கொடுக்கலாம்.
  3. உடல்சூடு சாதாரணமான நிலைக்கு வநதவுடன், பாதிக்கப்பட்ட நபரை, குளிர்ந்த இடத்தில் ஓய்நதிருக்கச் செய்யவும்
  4. உடல்சூடு அதிகரிக்கும் போது மீண்டும் குளிர்விக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
  5. எவ்விதமான மருந்துகளையும் கொடுக்கக் கூடாது.
  6. மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

நன்றி
http://en.wikipedia.org/wiki/First_aid

pdf file பதிவிறக்கம் செய்ய;
To download some pdf files ;
http://www.au.af.mil/au/awc/awcgate/army/fm4_25x11.pdf
http://www.patiencepress.com/samples/firstaid.pdf
http://www.ihsdesmoines.org/documents/Documents/emergency_aid_guide.pdf
http://www.hosa.org/natorg/sectb/cat-ii/cpr.pdf
http://www.macscouter.com/mb/worksheets/First-Aid.pdf
http://upload.wikimedia.org/wikibooks/en/1/1d/First_Aid_for_Canada.pdf


Saturday, February 13, 2010

நீங்களும் இன்றைய நாளில் உங்கள் காதலில் வெற்றி பெற சில விடயங்கள் ............... (Way to success in love . )

காதல் செய்யும் காதலர்களுக்கும்
காதல் தேடும் மாணவர்களுக்கும்
எனது இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்
-என்றென்றும் அன்புடன்-
-kanarajan-
இன்றைய நாளில்  உங்களுக்காக......

மனிதகுலம் தோன்றிய முதல் காதல் இருக்கிறது . காதல் மனிதனுக்கு மட்டுமல்ல , எல்லா உயிரினத்துக்குள்ளேயும் காதல் இருக்கிறது. மென்மையான காமம் தான் காதல் . காதலில் ஒரு விதமான காமம் இழையோடிக் கொண்டிருக்கிறது. காமம் இல்லாமல் காதல் இல்லை . காமம் இல்லாத காதல் என்பது அன்பு. காதல் ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை எதிர்பார்ப்பது . அன்பு எதிர் பார்ப்பற்றது. அன்பை எதிர்பார்ப்பு இல்லாமல் செலுத்தலாம் . காதலுக்கு வெற்றியும் உண்டு தோல்வியும் உண்டு. அன்புக்கு வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை. ஆண் பெண்ணிடமோ , பெண் ஆணிடமோ அன்பு செலுத்தினால் அது காதலாக மாறும் . காதல் அன்பாக மாறாது. காதல் என்பது உணர்வுகளின் உச்சக்கட்டம் . கால் முறிந்தால் கூட சரியாக்கலாம் ஆனால் காதல் முறிந்தால் ஒன்றும் செய்ய இயலாது. அன்புக்கு காரணம் சொல்லலாம் , காதலுக்கு காரணம் சொல்ல முடியாது. அன்பும் காதலும் வேறு வேறு , பிரித்தறிய தெரிய வேண்டும். அன்புக்கு வரையறையுன்டு . காதல் அப்படியல்ல,அன்பை விட ஒருபடி மேலே,உயிருடன் உயிராய் உடலுடன் உடலாய், அப்படிபட்ட மேலான காதலை வெற்றி பெறச்செய்வது எப்படி?

காதலில் வெற்றி பெறுவது எப்படி என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான், இருந்தாலும் காதல் செய்துவிட்டு அதிலிருந்து வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவிப்பவர்கள் ஏராளம் . ஒரு சில பேரே காதலில் வெற்றி பெறுகிறார்கள். கடைசிவரை சந்தோசமாக வாழ்கிறார்கள் .

காதல் செய்வதற்கு முன் நாம் வாழும் சமுதாய அமைப்பை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் .
உணர்ச்சி வசப்படக்கூடாது.
காதலை வெளிப்படுத்தாமல் காதலிக்கக்கூடாது.
காதலை வெளிப்படுத்துவதற்கு முன் காதலரைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
காதலரின் நண்பர் மூலமாக அவரைப்பற்றி தெரிந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் .
வெளித்தொற்றம் கண்டு எடை போடக்கூடாது.
அவரது பெற்றோர் மற்றும் சொந்த ஊர் முதலியன தெரிந்து கொள்வது நல்லது.
பெற்றோர்கள் எப்படி பட்டவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிப்பார்களா என்று தெரிந்து கொள்ள வேண்டும் .
பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் காதலர் பெற்றோரை எதிர்த்து துணிச்சலோடு கல்யாணம் செய்து கொள்வாரா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
பெற்றோரை எதிர்த்து வர முடியாதவராய் இருந்தால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும் .

காதலர் கடைசி நேரத்தில் காலை வாரிவிடடால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும் .

கண்டபடி சுற்றுவதை தவிர்க்க வேண்டும் . வரம்பு மீறி நடப்பதை தவிர்க்க வேண்டும் . அளவோடு சந்தித்து அளவோடு பேச வேண்டும் . அன்றாடம் குடும்பத்தில் நடந்த விசயங்களைப் பேசுவதை தவிர்க்க வேண்டும் . அறிவுப்பூர்வமன விசயங்களைப் பேச வேண்டும் . பொதுவான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் .

காதலர் கல்யாணம் பற்றி பேசும் போது என்ன நினைக்கிறார். அவரில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்று கவனிக்க வேண்டும் . காதலை வெளியிட்டவுடன் , கல்யாணத்துக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . அதிக காலம் கடத்தக் கூடாது.

காலம் கடத்தும் காதலரை உற்று நோக்க வேண்டும் . உள் மனதை ஆராய வேண்டும். காலம் கடத்துவது நியாயமானது தானா என்று ஆராய வேண்டும் . காதலர் ஏமாற்றிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு எப்போதும் இருக்க வேண்டும் .

பாதிக்கிணறு தாண்டும் போது அம்மா அப்பாவுக்கு விருப்பம் இல்லை என்று சொல்வார்கள் .அப்படிப்பட்ட காதலர் அம்மா அப்பாவை எதிர்த்து துணிச்சலாக கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டார். பெற்றோரை காரணம் காட்டிக் கொண்டே இருப்பார்.
இப்படிப்பட்டவரின் காதல் தோல்வியில் போய் முடியும். அதனால்தான் காதலை வெளிப்படுத்தியவுடன் காலம் கடத்தக் கூடாது. பெற்றோருக்கு விருப்பமில்லை என்று காலம் கடந்து தெரியவரும் போது வருத்தமாக இருக்கும் . என்ன செய்வது என்று தெரியாது , பிரச்னைகள் தலையெடுக்கும் , உடனே திருமணப் பேச்சை தொடங்க வேண்டும் . காதலிப்பது மூண்றாம் நபருக்கு தெரியக்கூடாது என்று மறைக்கக்கூடாது.
அவ்வாறு மறைப்பது தமக்கு தாமே குழிபறித்துக் கொள்வது ஆகும் . காதலை வெளியிட்டவுடன் , இருவர் மனமும் ஒத்துப் போனவுடன் , தாங்கள் காதலர்கள் என்று இவ்வுலகம் அறிய வேண்டும் . அப்போதுதான் , உடனடி எதிர்ப்புகள் சமாளிக்கப்பட்டு ,சமாதானப்படுத்தப்பட்டு, காதல் கல்யாணத்தில் போய் முடியும்.

ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கல்யாணத்தை தள்ளிப்போடும் காதலரைவிட்டு உடனடியாக தள்ளிப் போய்விடுவது நல்லது .இல்லையென்றால் இறுதியில் ஒன்றும் செய்யமுடியாமல் காதலில் தோல்வி கண்டு துவண்டு விழ நேரிடும். அல்லது காதலரை கட்டாயப் படுத்தி கல்யானத்துக்கு உடனடியாக சம்மதிக்க வைத்து கல்யாணத்தை முடித்து விட வேண்டும் . இது இரு பாலருக்கும் பொதுவானது.

சிலா,; பெற்றேர்ருக்கு சம்மதமில்லை வரதட்சனை எதிர்பார்க்கிறார்கள் , வரதட்சனை கொடுத்தால் சம்மதிப்பார்களாம் என்று சொல்லும் காதலனைவிட்டு உடனடியாக விலகிவிடுவது நல்லது. வரதட்சனை கொடுத்தபின்பும் பெற்றோரின் கொடுமை தொடர்ந்தால் என்ன செய்வது . இவையெல்லாம் முன்கூட்டியே அறிய வேண்டும்.

வாய் சொல் வீரனா …செயல் வீரனா என்று அறிந்து காதல் செய்ய வேண்டும் .
காதலர்கள் தங்கள் காதலை பகிர்ந்து கொள்ளு முன் பெற்றோர்களின் சம்மதத்தை கேட்டுக்கொள்வது நல்லது , குடும்பச்சூழ்நிலை , பொருளாதாரம் , பாரம்பரியம் , முதலியவற்றை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் .இதன் பிறகு காதலித்தால் இனிமை கூடும்.

காதலில் என்றும் உடல் நாட்டம் இருக்க கூடாது. காதல் மனம் சார்ந்ததாக இருக்க வேண்டும். உண்மையானதாக இருக்க வேண்டும் . உயர்வானதாக இருக்க வேண்டும் .உத்தமமாக இருக்க வேண்டும் . வாழப்போகும் வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்க வேண்டும் காதல். காதல் இவ்வாறாக இருந்தால் வெற்றி பெறும் .

இன்றைய சமுதாயத்தில் படிக்காதவர்களை விட படித்தவர்கள் தான் அதிகமாக காதல் செய்கிறார்கள் . அவர்களின் காதலில்தான் ஆயிரம் பிரச்னைகள் . எத்தனையோ விசயங்களை அலசி ஆராயும் இவர்கள் சொந்த விசயங்களில் சோடை போய் விடுகிறார்கள்.

கட்டுப்பாடில்லாமல் வரம்பு மீறி நடந்துவிட்டு , பின் காதலென்று சொல்லி காலம் கடத்துபவர் ஏராளமானோர் . அவர்களுக்கு காலம் தான் பதில் சொல்லும் .

ஆரம்பத்தில் வரதட்சனை ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி , காதலிக்க தொடங்கி காலங்கடத்தி கல்யாணம் என்ற நெருக்கடி வரும் போது அம்மா அப்பா சம்மதம் இல்லை , அவர்களை எப்படியாவது சம்மதிக்க வைக்கிறேன் என்று காலம் கடத்தி , சிறிது காலம் கழித்து அம்மா அப்பா ரொம்ப கறாறா இருக்குறாங்க , நான் கல்யாணம் செய்தா உயிரை விட்டுறாவாங்களாம் என்று பயமுறுத்தி , இன்னும் சிறிது காலம் கடத்தி , அதிகமான வரதட்சைனை கொடுத்தா வந்து பேசுவாங்களாம் என்று சொல்லி ஆழம் பாத்து , ரெண்டு பேரும் ரிஐpஸ்டர் மேரேஜ் செய்யலாம்னு சொன்னா உங்க குடும்பம் மரியாதையான குடும்பம் , அதுக்கு கேடு வந்துரக்கூடாதுன்னு போலி சமாதானம் சொல்லி பொழுதைக் கழிக்கும் காதலரை நம்பி பின்னால் திரிவது பேதைமையாகும்.
காதலிக்கும் முன் நன்றாக யோசித்து , பொறுமையாக , செயல் பட வேண்டும். காதல் என்பது உணர்வின் அடிப்படையில் தோன்றினாலும் , உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அறிவுப்பூர்வமாக செயல் பட்டால் காதல் என்றும் ஜெயிக்கும்.





-என்றென்றும்-
அன்புடன் 
உங்கள் கணா -
வாழ்த்துக்கள் நண்பர்களே..

Monday, February 8, 2010

கடல் விமானம்

நிலையான இறக்கைகளைக் கொண்ட நீர் நிலைகளில் தரையிறங்கக் கூடியதும் நீர்நிலைகளிலிருந்து மேலெழக்கூடியதுமான விமானங்களே கடல்விமானங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவ்வகை விமானங்கள் பொதுவாக இரண்டு வகையாக வகைப்படுத்தப்படுகின்றன.

மிதவை விமானங்கள் (float planes)
பறக்கும் படகுகள் (flying boats)
இவ்விருவகை விமானங்களும் நீர்நிலைகளில் தரையிறங்கி மேலெழக்கூடிய தன்மையினைக் கொண்டிருந்த போதிலும் அவையிரண்டும் அவற்றின் உடலமைப்பில் வித்தியாசப்படுகின்றன. மிதவை விமானங்கள் சாதாரண விமானங்களையொத்த உடலமைப்பைக் கொண்டிருப்பதுடன் அவற்றின் சக்கரங்களுக்குப் பதிலாக, நீரில் மிதப்பதற்கு ஏற்றவகையில் மிதவை அமைப்புக்கள் காணப்படும். பொதுவாகச் சிறியவகைக் கடல் விமானங்களே இவ்வகைக்குள் அடங்குகின்றன. பறக்கும் படகுகள் வகை விமானங்களில் அவற்றின் உடலின் கீழ்ப்பகுதி நீரில் மிதப்பதற்கு ஏற்றவகையில் படகு ஒன்றின் கீழ்ப்பகுதியை ஒத்ததாகக் காணப்படும். பாரிய கடல்விமானங்கள் அனைத்தும் இவ்வகையினுள்ளேயே அடங்குகின்றன. இருந்தபோதிலும் இவ்வகைக் கடல்விமானங்களினும் சிறியரகக் கடல்விமானங்களும் காணப்படுகின்றன.

கடல் விமானங்கள் நீர்நிலைகளில் மட்டுமே தரையிறங்கி மேலெழக்கூடிய வகையில் வடிவமைப்பைக் கொண்டிருந்த போதிலும், ஈரூடக வான்கலங்கள் (amphibious aircraft) தரை மற்றும் நீர்நிலைகளில் தரையிறங்கி மேலெழக்கூடியவகையில் வடிவமைப்பைக் கொண்டுள்ளன. அதாவது, ஈரூடக விமானங்களின் உடலின் அடிப்பகுதி நீரில் மிதப்பதற்கு ஏற்றவகையில் படகுபோன்ற அமைப்பில் காணப்படுவதுடன் அவை தரையில் ஓடுவதற்கேற்ற வகையில் சக்கரங்களையும் கொண்டிருக்கின்றன.

இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியில் பல்வேறு நாட்டுக் கடற்படைகளால் கடல்விமானங்கள் வேவு நடவடிக்கை, மீட்புப்பணி மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் போன்ற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்கக் கடற்படையினர் கடல் விமானங்களை வேவுப்பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதோடு கனரக இயந்திரத்துப்பாக்கிகள் மற்றும் கடற்தாக்குதற் குண்டுகள் என்பவற்றைப் பொருத்தித் தாக்குதற் தேவைகளுக்காகவும் பயன்படுத்தினர்.

இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியில் இவ்வகை விமானங்கள் பெருமளவிற் பயன்படுத்தப்பட்ட போதிலும், பாருக்குப் பின்னான காலப்பகுதியில் இவ்விமானங்களின் பயன்பாடு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. நவீன போர்விமானங்களின் அபரிதமான தொழிநுட்ப வளர்ச்சி, நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்முறையில் புகுத்தப்பட்ட புதிய மாற்றீடுகள் மற்றும் தந்திரோபாயங்கள், வேவு நடவடிக்கையில் உலங்கு வானூர்திகளின் இலகுவானதும் விரைவானதுமான பயன்பாடு என்பன, கடல்விமானங்களின் தேவையை இல்லாது செய்தன. அத்துடன் நவீன போர்விமானங்களுடன் ஒப்பிடும்போது, கடல்விமானங்களின் வேகம் (Speed), பறப்புத்தூரம் (Range) என்பனவற்றுடன் அவற்றின் போர்க்கருவிகள் காவுதிறனும் (warloads) குறைவானதாகவே காணப்படுகின்றன.

பொதுவாக கடல்விமானம் ஒன்று நீர்நிலையொன்றிலிருந்து மேலெழும்போது, நீரில் ஓடும்போது நீரினால் ஏற்படுத்தப்படும் தடை, நீரின் மேற்பரப்பு இழுவிசை போன்றவற்றைக் கடந்தே மேலெழவேண்டிய தேவையுள்ளது. இவ்வாறா காரணங்களினால் மேலதிக சக்தித்தேவை தவிர்க்க முடியாததாகின்றது. சாதாரண விமானங்களுக்குத் தேவையற்ற அந்த மேலதிக சக்தித்தேவையைத் தவிர்ப்பதும் கடல்விமானங்களின் பயன்பாடு குறைவடைந்ததற்கு ஒரு பிரதான காரணம் ஆகும். எவ்வாறாயினும், பல்வேறு நாடுகளின் கடற்படைகளின் பயன்பாட்டிலிருந்து கடல் விமானங்களின் பயன்பாடு முற்றுமுழுதாக ஒதுக்கப்பட்டுவிடவில்லை. அத்துடன், தரை ஓடுபாதைகள் அற்றதும், உலங்குவானூர்திகளைப் பயன்படுத்த முடியாத தொலைதூரப் பயன்பாடுகளுக்கு கடல் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது தவிர காட்டுத்தீயணைப்பு நடவடிக்கைகளிலும் கடல் விமானங்களின் பயன்பாடு காணப்படுகின்றது. நீர்நிலைகளிலிருந்து தண்ணீரை எடுத்துவரும் செயற்பாட்டினை கடல் விமானத்தால் இலகுவாக மேற்கொள்ள முடியும் என்பதனாலேயே தீயணைப்பு செயற்பாட்டிற்கு இது இலகுவானதாகக் காணப்படுகின்றது.

பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மிகையொலி வேகத்தாரைக் (super sonic) கடல்விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. அமெரிக்கா இம்முயற்சியில் வெற்றியடைந்த போதிலும், அது தன் முயற்சியைத் தயாரிப்புப் பணிகளில் இறங்காது பரிசோதனையுடன் நிறுத்திக்கொண்டது. அமெரிக்காவினாற் பரிசோதிக்கப்பட்டு Convair F2Y Sea Dart என்று பெயரிடப்பட்ட கடல்விமானமே உலகின் ஒரேயொரு வெற்றிகரமான மிகையொலி வேகத்தாரைக் கடல்விமானமாகும் (Supersonic Seaplane).

Saturday, February 6, 2010

Unmanned Aerial Vehicle (ஆளில்லா வானூர்தி)

மனிதர்களின் கட்டுப்பாடு அற்று தன்னியக்கமாகவோ அல்லது மனிதர்களின் தொலைக் கட்டுப்பாட்டின் மூலமாகவோ இயங்கும் வானூர்திகளே ஆளில்லா வானூர்திகள் (Unmanned Aerial Vehicles) என்றழைக்கப்படுகின்றன. பெரும்பாலான ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமே இயக்கப்படுவதன் காரணமாக இவ்வகை வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டு செலுத்தி வாகனம் (Remotely Piloted Vehicle) என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வகையான வானூர்திகள் இராணுவப் பயன்பாட்டிலேயே பெருமளவிற் காணப்படுகினறன. இவை தாரை (jet) அல்லது தாட்பாழ் (piston) இயந்திரத்தின் மூலம் இயங்குகினறன.










பொதுவாக இவ்வகை வானூர்திகள் அவற்றின் வடிவமைப்பு, அளவு, கட்டமைப்பு மற்றும் குணவியல்புகளிற்கேற்ப வகைப்படுத்தப்படுகின்றன. ஆரம்பகாலங்களிலிருந்து ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமாகவே இயக்கப்பட்டுவந்த போதிலும், நவீன ஆளில்லா வானூர்திகள் தன்னியக்க கட்டுப்பாட்டுக் கருவிகளையும் கொண்டுள்ளன. இவ்வகை வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டு மூலமாகவோ அல்லது முற்கூட்டியே பதிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்திற்கேற்ப தன்னியக்கமாகவோ இயக்கப்படுகின்றது.
நவீன இராணுவப் பயன்பாட்டிலுள்ள ஆளில்லா வானூர்திகள் கண்காணிப்புப் பணி மட்டுமல்லாது தாக்குதல் நடாத்தும் திறன்வாய்ந்தவையாகவும் காணப்படுகின்றன. இவைதவிர இராணுவப் பயன்பாடற்ற செயற்பாடுகளான தீயணைப்பு, பொதுப் பாதுகாப்புச் சேவையினரின் கண்காணிப்புப் பணி போன்றவற்றிலும் ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆளில்லா வானூர்திகள் அவற்றின் பயன்பாட்டுரீதியாக ஆறு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

எதிரிப் படைகளின் தரை இலக்குக்களைத் தாக்கியழித்தல் (aerial attack)
சமர்க்கள அவதானிப்புப் பணி (reconnaissance)
வான் யுத்தம் (dog fight)
வான்வழி இராணுவப் போக்குவரத்து
ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணி (research and development)
பொது மற்றும் வர்த்தகப் பணி (civil and commercial purpose)

இவ் ஆறு வகையான ஆளில்லா வானூர்திகளும் அவற்றின் பறப்பு வீச்செல்லை (range), பறப்பு உயரம் (altitude) போன்றவற்றின் அடிப்படையிலும் இவ்வகை வானூர்திகள் வகைப்படுத்தப்படுகின்றன. அமெரிக்க இராணுவம் பல்வேறுபட்ட ஆளில்லா வானூர்தித் தொகுதியமைப்பாகப் (unmanned aircraft system) பயன்படுத்திவருகின்றது. இவ்வகையான தொகுதிகளிலுள்ள வானூர்திகள் இணைக்கப்பட்ட வலையமைப்பினூடு இணைந்து செயற்படுவதுடன் தரையிலுள்ள துருப்புக்களுடன் தொடர்பைப் பேணி தகவல்களை வழங்குகின்றன. இவ்வகையான ஆளில்லா வானூர்தித் தொகுதிகளின் வலையமைப்பு Tier என்ற சொற்பதத்தினாற் குறிக்கப்படுகின்றது. இராணுவத் திட்டமிடலாளர்கள் தனித்துச் செயற்படும் வானூர்திகளை இவ் வலையமைப்பில் தொழிற்படும் வானூர்திகளிலிருந்து பிரித்தறிய இச் சொற்பதத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த ஆளில்லா வானூர்தி தொகுதி வலையமைப்பானது பல்வேறுபட்ட வகையான ஆளில்லா வானூர்திகளைக் கொண்டிருக்கும். அகெரிக்க வான்படை மற்றும் அமெரிக்கக் கடற்படை ஆகியன தமக்கெனத் தனித்தனியான ஆளில்லா வானூர்தித் தொகுதியமைப்பைக் கொண்டுள்ளன. இவ்விரு தொகுதியமைப்புக்களும் ஒன்றுக்கொன்று தொடர்பின்றித் தனித்தனியாகவே இயக்கப்படுகின்றன.

ஆளில்லா வானூர்திகள் பல்வேறுபட்ட செயற்பாடுகளைக் கொண்டவையாகக் காணப்பட்ட போதிலும், அவற்றின் பொதுவானதும் பெரும்பாலானதுமான பயன்பாடு ஏதோவொரு வகையான அவதானிப்புப் பணியாகவே காணப்படுகின்றது. போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் பயன்பாட்டில் ஆளில்லா வானூர்திகள் மிகக்குறைந்தளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன.

அவதானிப்புப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் இவ்வகை வானூர்திகள் இராணுவம்சார் அவதானிப்பு நடவடிக்கை, தாவர மற்றும் விலங்குகளின் அவதானிப்பு, கடல்சார் அவதானிப்புப்பணி போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகையான பயன்பாட்டிற்காக கட்புல ஒளிப்படக்கருவி (visual light camera), அகச்சிவப்புக்கதிர் ஒளிப்படக்கருவி (infrared camera) மற்றும் ரேடார் அவதானிப்புக் கருவி போன்றன பயன்படுத்தப்படுகின்றன. வேறுசில சிறப்புப் பயன்பாட்டிற்காக நுண்ணலை உணரி (microwave sensor) மற்றும் புறஊதாக்கதிர் உணரி (ultraviolet sensor) போன்றனவும் பயன்படுத்தப்படுகின்றன. இவைதவிர வளியிற் காணப்படும் நுண்ணுயிர்கள் (microorganism) மற்றும் இராசயணப் பொருட்கள் போன்றவற்றை அவதானிப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இவ்வகை வானூர்திகள் உயிரி உணரி (biological sensor) மற்றும் இரசாயண உணரி (chemical sensors) போன்றவற்றைப் பயன்படுத்துகினறன.

தற்காலப் பயன்பாட்டிலிருக்கும் கண்காணிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆளில்லா வானூர்திகள் அதிலுள்ள கருவிகள் மூலம் அவதானிக்கும் காட்சிகளை உடனுக்குடன் தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு தொலைத்தொடர்புக் கருவிகள் மூலம் அனுப்பிக்கொண்டிருக்கும். இதன்காரணமாக இவ்வானூர்திகள் எதிரிப்படைகளாற் சுட்டுவீழ்த்தப்பட்டாலும் அவதானிப்பின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் தொலைவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் ஆரம்பகாலங்களிற் பயன்படுத்தப்பட்ட இவ்வகை ஆளில்ல அவதானிப்பு வானூர்திகள் அவதானிக்கும் காட்சிகளையும் தரவுகளையும் அதனுள்ளிருக்கும் பதிவுக்கருவியிற் பதிந்து வைத்துக்கொள்ளும். வானூர்தி தளம் திரும்பியதும் அதனுள்ளிருக்கும் கருவியிற் பதியப்பட்டிருக்கும் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படும்.

மனிதர்கள் செல்வதற்கு ஆபத்தானவையாகக் காணப்படும் இடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளில் இவ்வகை வானூர்திகளின் பயன்பாடு மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றது. நவீன இராணுவங்களின் பயன்பாட்டில் ஆளில்லா வானூர்திகள் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றி தாக்குதல் நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை வானூர்திகள் தரையிலுள்ள பாரிய எதிரித்தளங்களைத் தாக்கியளித்தற் செயற்பாடுகளுக்கு மட்டுமன்றி தனிமனித இலக்குக்களை அழிக்கும் செயற்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

Friday, February 5, 2010

Hypersonic Aircraft

விமானவியற் தொழிநுட்பத்தில், ஒலியின் வேகத்திலும் ஐந்து மடங்கு அதிகமான வேகத்திற் பயணிக்கவல்ல விமானங்கள் hypersonic விமானங்கள் என்றழைக்கப்படுகின்றன. சாதாரண தாரை இயந்திரங்களின் (jet engines) மூலம் ஒலியின் ஐந்து மடங்கு வேகத்தினைப் பெறுவதென்பது இலகுவான காரியமில்லை. இதன் காரணமாக இவ்வகை விமானங்களுக்கு, அடிப்படையில் ramjet இயந்திரத்தின் தத்துவத்தில் இயங்கினாலும், அதனைவிட அதிகளவாக உந்துசக்தியைப் பிறப்பிக்கவல்ல scramjet இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

2004 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவினாற் (NASA) பரிசோதிக்கப்பட்ட X-43A என்ற விமானமே உலகின் அதிவேகமான விமானமாகும். பொதுப்பயன்பாட்டிற்கு வராது பரிசோதனையிலிருக்கும் இவ்விமானம் ஒலியைவிட 10 மடங்கு வேகத்திற் பறக்கவல்லது. அதாவது ஒரு மணித்தியாலத்தில் 6600 மைல்கள் அல்லது 10600 கிலோமீற்றர்கள் தூரத்தைக் கடக்கவல்லது. இவ்விமானத்தில் scramjet வகை இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக உந்துகணைகள் (rockets) அவற்றின் எரிபொருளை எரிப்பதற்குத் தேவையான எரியூக்கியையும் (ஒட்சிசன்) கொள்கலனிலேயே காவிச்செல்லும். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தினாற் பயன்படுத்தப்படும் விண்ணோடங்கள் 1 359 000 பவுண்ட் (pounds) நிறையுடைய 143 000 கலன் (gallons) ஒட்சிசனைக் காவிச்செல்கின்றன. எரியூக்கியையும் காவிச்செல்வதன் காரணமாக உந்துகணைகளால் புவியின் வளிமண்டலத்தைத் தாண்டியும் பயணிக்க முடியும் என்றபோதிலும் ஒட்சிசனுக்கான நிறை காரணமாக, அவற்றால் அதிகமாக சுமையினைக் காவிச்செல்ல முடியாது. X-43A விமானத்தினை நாசா நிறுவனம் விண்வெளிப் பயணத்திற்குப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. இவ்விமானத்தில் scramjet வகை இயந்திரம் பயன்படுத்தப்படுவதனால் வளிமண்டலத்தினூடான பயணத்தின்போது இவ்விமானம் எரிபொருளை எரிப்பதற்கான ஒட்சிசனை வளியிலிருந்து பெற்றுக்கொள்ளும். அத்தோடு வளிமண்டலம் தாண்டிய பயணத்திற்கான ஒட்சிசனை மட்டும் தாங்கியிற் காவிச்செல்லும்.

hypersonic வகை விமானங்களிற் பயன்படுத்தப்படும் scramjet வகை தாரை இயந்திரங்கள் அவற்றின் அடிப்படை வடிவமைப்பில் ramjet வகை தாரை இயந்திரங்களை ஒத்திருந்தாலும் அதிகளவான உந்துவிசையைப் பெறுவதற்காக தேவையான மாற்றங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றன. ramjet இனைப் போன்றே scramjet இயந்திரமும் நகரும் பாகங்கள் (moving parts) எவற்றையும் கொண்டிருக்க மாட்டா. எனவே விமானத்தின் உயர் வேகத்தின்காரணமாகவே இயந்திரத்தில் வளியமுக்கம் ஏற்பட்டு எரிபொருள் எரிக்கப்படுகின்றது. இதன்காரணமாக, இவ்வகை விமானங்களுக்கான ஆரம்பநிலை உந்துவிசை தாங்கியில் நிரப்பப்பட்டிருக்கும் எரியூக்கியின் உதவியுடனேயே வழங்கப்படுகின்றது. ஆகவே இவ்வகை விமானங்னளால் சாதாரண விமானங்களைப்போன்று தரையில் ஓடி மேலெழ முடியாது. X-43A விமானம் ஆரம்பத்தில் மேலெழுவதற்காக ஊக்கி உந்துகணைகளைக் (booster rockets) கொண்டுள்ளது. இந்த X-43A விமானம் ஆரம்பத்தில் ஊக்கி உந்துகணையினால் உந்திச்செல்லப்பட்டு hypersonic வேகத்தை அடைந்ததும் உந்துகணைகள் தனியாகப் பிரிந்துவிட இயந்திரத்தின் மூலம் தொடர்ந்து பறக்கின்றது.




X-43A விமானம் இதுவரை பொதுப்பயன்பாட்டிற்கு வராது பரிசோதனை நிலையிலேயே காணப்படுகின்றது. இப்பரிசோதனை விமானங்கள் விமானிகளின்றித் முற்கூட்டிப் பதிவுசெய்யப்பட்ட நிரலுக்கேற்பவே பரிசோதனைப் பறப்புக்களை மேற்கொள்கின்றது (preprogrammed test flight). இப்பரிசோதனைப் பறப்பிலுள்ள ஆறு படிநிலைகளும் வருமாறு.


ஊக்கி உந்துகணையினை விமானத்துடன் பொருத்தப்படுகின்றது.
ஊக்கி உந்துகணை பொருத்தப்பட்ட X-43A விமானத்தினை B-52 விமானம் ஒன்றின்மூலம் 20000 அடிகள் (6000 m) உயரத்திற்கு எடுத்துச்செல்லப்படுகின்றது.
20000 அடி உயரத்தில் X-43A விமானத்தை B-52 விமானத்திலிருந்து தனியாகக் கழற்றி விடப்படுகின்றது.
X-43A விமானம் ஊக்கி உந்துகணையினால் ஒலியின் ஐந்து மடங்கு வேகத்திற்கு (5 Mach) ஆர்முடுக்கப்பட்டு 100 000 அடி உயரத்திற்கு செலுத்தப்படுகின்றது.
100 000 அடி உயரத்தில் ஊக்கி உந்துகணைகள் விமானத்திலிருந்து கழற்றிவிடப்பட்ட பின்னர் விமானம் இயந்திரத்தின் உந்துசக்தியிற் தொடர்ந்து பறக்கின்றது.
சில நிமிடங்கள் கடலின் மேலாகப் பறந்து பின்னர் கடலினுள் இறங்குகின்றது.

Wednesday, February 3, 2010

எறிபாதை ஏவுகணை (Ballistic Missile)

மிகத் தொலைதூர இலக்குக்களை நோக்கி உயர் புவிச்சுற்றுவட்டப்பாதைவழியே வழிநடாத்தப்பட்டு இலக்குகளைத் தாக்கியழிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஏவுகணையே எறிபாதை ஏவுகணை (Ballistic Missile) என்றழைக்கப்படுகின்றது. இவ்வகை ஏவுகணைகள் எறிபாதை ஏவுகணை என்று அழைக்கப்படுவதன் காரணம் இவை ஒரு எறியப்பாதையினூடாகவே பயணிக்கின்றன. இவ்வகை ஏவுகணைகள் கிடைப்பறப்பை மேற்கொள்வதில்லை. சாதாரணமாக பந்து ஒன்றையோ அல்லது வேறொரு பொருளையோ எறியும்போது அது எவ்வாறு ஒரு எறியப்பாதையில் பயணிக்கின்றதோ, அவ்வாறே எறியப்பாதை ஏவுகணைகளும் பயணிக்கின்றன.

ஏவுகணையின் துரவீச்சு அதிகரிக்கும்போது அதன் எறியப்பாதை புவியீர்ப்பைத் தாண்டிய வெற்றிடத்தினூடாக அமைகின்றது. இவ வெற்றிடத்தினூடான எறியப்பாதையே ஏவுகணையின் புவிச்சுற்றுவட்டப்பாதை என்றழைக்கப்படுகின்றது. பந்து ஒன்றையோ அல்லது வேறொரு பொருளையோ எறியும்போது அதற்கான உந்துவிசை கையிலிருந்து கிடைக்கின்றது.

அதேபோன்றே ஏவுகணையின் உந்துகணை செலுத்தி (rocket) ஏவுகணைக்கான ஆரம்ப உந்துவிசையை (thrust) வழங்குகின்றது. இதன்பின் ஏவுகணை புவியீர்ப்பு விதிக்கமைய எறியப்பாதையினூடு பயணித்து இலக்கைத் தாக்குகின்றது. இவ்வகை ஏவுகணைகள் இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது புவியீர்ப்பு விசையைத் தாண்டிய புவிச்சுற்றுவட்டப் பாதையினூடு பயணித்து இலக்கின்மீது மோதி வெடிக்கின்றது. இவ்வகை ஏவுகணைகள் மூன்று பறப்பு நிலைகளைக் கொண்டுள்ளன.

ஆரம்பநிலை உந்துவிசையுடனான பறப்பு (powered flight).
புவிச்சுற்றுவட்டப் பாதையூடான சுயபறப்பு (free flight).
இலக்குநோக்கிய உள்நுழைவுப் பறப்பு (re-entry).
ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டதும் ஏவுகணையின் உந்துகணை (rocket), அதனை உயர்நிலைப் புவிச்சுற்றுவட்டப்பாதை நோக்கி உந்திச் செல்கின்றது. குறித்த உயர்நிலைச் சுற்றுவட்டப்பாதையை அடைந்ததும், ஏவுகணை இலக்கைநோக்கி வழிநடாத்தப்படுகின்றது. குறித்த இலக்கின் தாக்குதல் வீச்செல்லையை அடைந்ததும் ஏவுகணை புவியீர்ப்பு எல்லைக்குள் செலுத்தப்பட்டு புவியீர்ப்பு விசையின் கட்டுப்பாட்டில் இலக்கை நோக்கிச் செலுத்தப்படுகின்றது.

எறிபாதை ஏவுகணைகள் தரையிலமைந்துள்ள ஏவுதளம், வாகனங்களிலமைந்துள்ள நகர்த்தக்கூடிய தளம், கப்பல் மற்றும் நீர்மூழ்கி போன்றவற்றிலிருந்து ஏவப்படுகின்றன. இவ்வகை ஏவுகணைகளின் ஆரம்பநிலை உந்துவிசையுடனான பறப்பு சில விநாடி நேரத்திலிருந்து சில நிமிடங்கள் வரை நீடிக்கலாம். அத்துடன் இவ்வகை ஏவுகணைகள் தனியாக ஒரு உந்துகணை செலுத்தியையோ (rocket) அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உந்துகணை அடுக்குக்களையோ (rocket stage) கொண்டிருக்கின்றன. ஆரம்பநிலை உந்துவிசையின் மூலம் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டதும் ஏவுகணைக்கான உந்துவிசை தேவையற்றதாகின்றது. தொடர்ந்து ஏவுகணை இலக்குநோக்கிய நீண்ட பறப்பினை புவிச்சுற்றுவட்டப் பாதையூடாகச் சுயமாக மேற்கொள்கின்றது. இவ்வகை ஏவுகணைகளின் புவிச்சுற்றுவட்டப்பாதையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து சில நூறு கிலோமீற்றர்களிலிருந்து ஆயிரம் கிலோமீற்றர் வரை காணப்படும். கண்டம்விட்டுக் கண்டம் பாயும் இவ்வகை ஏவுகணைகள் (intercontinental ballistic missiles) அவற்றின் சுயபறப்பிற்கான ஆகக்கூடிய உயர்சுற்றுவட்டப்பாதையாக 1200 கிலோமீற்றர் உயரச் சுற்றுவட்டப்பாதைக்கு செலுத்தப்படுகின்றன. இவ்வகை ஏவுகணைகள் இலக்கினை அண்மிக்கும்போது புவியீர்ப்புவிசைக்குள் உள்நுளைவதற்கு ஏற்றாற்போல் அவற்றின் பறப்புப்பாதை தீர்மானிக்கப்படுகின்றது. இதன்காரணமாக, ஏவுகணை இலக்கை அண்மிக்கும்போது இது புவியீர்ப்பு விசைக்குள் நுழைந்து இலக்குநோக்கிய உள்நுழைவுப் பறப்பினை மேற்கொள்கின்றது.

மேலே குறிப்பிடப்பட்டது போன்று இவ்வகை ஏவுகணைகள் ஒரு தனி உந்துகணை செலுத்தியையோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட உந்துகணைச் செலுத்திகளின் தொகுதிகயையோ கொண்டிருக்கலாம். ஒவ்வொரு உந்துகணை செலுத்தியும் தன்னகத்தே தனித்தனியாக எரிபொருளையும் எரியூக்கியையும் (திரவ அல்லது வாயுநிலை ஒட்சிசன்) கொண்டிருக்கும். இவ்வகை ஏவுகணைகள் எரியூக்கியையும் தன்னகத்தே கொண்டிருப்பதன் காரணம் இவை புவியின் வளிமண்டலம் தாண்டியும் தமது பறப்பை மேற்கொள்வதன் காரணமாக எரிபொருளை எரிப்பதற்கான எரியூக்கியை (ஒட்சிசன்) வளியிலிருந்து பெற்றுக்கொள்வதில்லை. ஒன்றிற்கு மேற்பட்ட உந்துகணை செலுத்தித் தொகுதிகளை (rocket stage) கொண்ட ஏவுகணைகளில் ஒவ்வொரு உந்துகணை செலுத்தியும் அதன் எரிபொருள் தீர்ந்ததும் ஏவுகணையிலிருந்து தனியே பிரிந்துவிட அதற்கு அடுத்த நிலையிலுக்க உந்துகணை செலுத்தி (next stage rocket) ஏவுகணையை உந்திச்செல்லும்.

எறிபாதை ஏவுகணைகளுக்கும் குரூஸ் வகை ஏவுகணைகளுக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. குரூஸ் வகை ஏவுகணைகள் ஒரு விமானத்தைப்போன்று இலக்குநோக்கிப் பறந்து செல்கின்றன. ஆனால் எறிபாதை ஏவுகணைகள் வளியினூடாக விமானம் போன்று பறக்கமாட்டா. அவை எறிபாதையூடாக (trajectory) இலக்குநோக்கி உந்திச் செலுத்தப்படுகின்றன. எனவே இவ்வகை ஏவுகணைகளில், குரூஸ் வகை ஏவுகணைகளில் காணப்படுவதுபோன்று வளியினூடான மேல்நோக்கிய தூக்குவிசையை (lifting force) ஏற்படுத்துவதற்கான இறக்கைகள் காணப்படமாட்டா. இவ்வகையான ஏவுகணைகள் ஒலியின் வேகத்திலும் 20 அல்லது அதற்கும் மேலான மடங்கு வேகத்திற் பயணிக்கின்றன. கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் பொதுவான மணிக்கு 15000 மைல் வேகத்தில் (7 km/sec) பயணிக்கவல்லனவாகக் காணப்படுகின்றன.

சராசரியாக 30 தொடக்கம் 100 அடிகள் வரை நீளமானதாகக் காணப்படும் எறிபாதை ஏவுகணைகள் பெரும்பாலும் திரவ (liquid) அல்லது திண்ம (solid) எரிபொருளின் மூலம் இயங்குகின்றதன. இவற்றின் வாற்பகுதியில் உந்துகணை செலுத்தி இயந்திரமும் பறப்புத்திசைக் கட்டுப்பாட்டுக் கருவிகளும் காணப்படுகின்றன. ஏவுகணையின் மூக்குப்பகுதியில் இலக்கினை அழிப்பதற்குத் தேவையான வெடிபொருளும் (warhead) ஏவுகணைக் கட்டுப்பாட்டுத் தொகுதியும் (missile control system) அமைந்திருக்கும். இவ்வகையான ஏவுகணைகள் அவற்றின் வெடிபொருட்களாக சாதாரண வெடிமருந்தினாலான வெடிபொருளையோ அல்லது அணுவாயுதங்களையோ கொண்டிருப்பதுடன் இவை ஒன்றிற்கு மேற்பட்ட தாக்குதல் வெடிபொருட்களைக் காவிச்சென்று பல இலக்குகளை அழிக்கவல்லன. இவ்வகையான ஒன்றிற்கு மேற்பட்ட இலக்குகளை அழிக்கவல்ல ஏவுகணைகள் Multiple Interdependently-targetable Reentry Vehicle (MIRV) என்றழைக்கப்படுகின்றன.