Wednesday, April 7, 2010

பாராளுமன்றத் தேர்தல் 2010

அடுத்த எனது சன் டிவி சர்ச்சை பற்றிய எனது  அலசலுக்கு முதல்!!!!

இப்போது இலங்கையில் எல்லோரும் எதிர்பார்க்கும் ஒரு விடயம் இந்தப்
 பாராளுமன்றத் தேர்தல் 2010.

தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்தது முதல் ஆரம்பித்த பிரச்சாரம் இன்றையளவில் ஓய்ந்திருக்கும் இந்த வேளையிலே
அடுத்த கட்டம் என்ன?????

பொன்னான உங்கள் வாக்குகள் யாருக்கு என்பதுதான் ??
யார் ஆட்சியை கைப் பற்றப் போகிறார்கள்??
யார் உங்களது  பிரதேசத்தில் தெரிவாகப் போகிறார்கள் ??

 !!!!!!!!!!!!!!

இவைதான் கேள்விகள் ---  விடைகள் ?
உங்கள் கைகளிலேயே உள்ளன....
வாக்களிக்க முன் சில விடயங்களை சிந்தியுங்கள்
சிந்திக்க பல விடயங்கள் உள்ளன

அதற்காகவே இந்த இடைவேளை உங்களுக்கு!!!

இதுவரை காலமும் நடந்தது என்ன?
யாருக்கு வாகளித்தீர்கள் ?
யாருக்கு மாலை இட்டீர்கள் ?
இதுவரை நாட்டில் நடந்தது என்ன?
உங்கள் வீட்டில் நடந்தது என்ன?

ஆனால் ஒன்று நீங்கள் இப்போது இன்னும் சங்கடமான நிலையில்
ஏனென்றால்
இதுவரை நாட்டில்  நடந்ததற்கும்
இப்போது நடப்பதற்கும் இனி நடக்கப் போவதற்கும்
நிறையவே வேறுபாடு உள்ளது

இந்த மூன்று காலத்திலும் (இறந்த, நிகழ், எதிர் காலங்கள்)  இலங்கையில் இருந்த இருக்கின்ற இருக்கப் போகின்ற யுத்த அரசியல் பொருளாதார ஜனநாயக மற்றும் பல்துறை சார்ந்த நிலைமைகளே இதற்கு காரணம்.
அன்று இருந்த நிலைமை வேறு இன்று வேறு !


நாட்டில் ஜனநாயகம் உள்ளது ஜனநாயக ஆட்சி நிலவுகின்றது என்று சொல்லப்படும்  காலம் இது !


 
நாட்டில் இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு  பழக்கப் பட்ட விடயம் யுத்தம்! அதை வைத்து அவர்களின் சம்பாத்தியம் ஓடியது
இப்போது  உள்ள நிலைமைக்கு அவர்கள் சரிப்படுவார்களா?
அவர்களது போக்கு கடந்த காலத்தில் எவ்வாறு இருந்தது ?
நாட்டை நல்லின  ஒருமைப் பாட்டை அவர்களால் கட்டி எழுப்ப முடியுமா?
அல்லது இருக்கும் நிலைமையும் இல்லாமல் போகுமா?
சிந்தியுங்கள் !!!!!!!!!!


 
தேர்தல் காலங்களில் அளிக்கப்படும் வாக்குறுதி என்ன?
நீங்கள் வாக்களித்து அனுப்பியவர்கள் நாடாளுமன்றில் உங்களுக்காக ஒருமுறையேனும் வாய் திறந்தார்களா?
உங்களிடம் கூறிய உறுதி மொழிகளில் ஒன்றையேனும் பெற்றுத் தந்தார்களா?

உணர்ச்சி வசப்பட்டு உரக்க குரல் கொடுத்து பின் ஊர் விட்டு ஓடி இல்லையேல் உலகம் சுற்றி உல்லாசம் அனுபவித்து மீண்டும் ஊர் வந்து ஓட்டு கேட்கும் வேட்பாளர்கள் .

இருக்கிறதோ இல்லையோ எதோ ஒரு கட்சி மக்களுக்கு எம்மால் இயன்ற சேவை என்று நிற்கும் வேட்பாளர்கள்.

பரம்பரை வழி வந்த ஓட்டு எங்க போகப் போகுது எண்டு வேட்பு மனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள் .

பல இடங்களில் வெட்கித் தலை குனிந்து அரசியலில் இது  எல்லாம் சகஜம் என்று ஆரவாரித்து மீண்டும் களம் இறங்கும் வேட்பாளர்கள் .

கட்சியே வேண்டாம் என்று களம் இறங்கும் வேட்பாளர்கள்.

ஒண்டோ இரண்டோ  மக்கள் வாக்கு எனக்கு இப்போ எப்படி? இல்லாட்டி இனி வரும் காலத்தில் பார்ப்போம் என்றெண்ணி வாக்காளரிடம் அறிமுகமாகும் வேட்பாளர்கள்.

நமது தொழிலை நாம தான் கவனிக்கணும் பிரபலம் ஆகணும் பெரிய ஆட்களுடன் போட்டோ எடுக்கணும் விளம்பரமாகனும் என்றெண்ணி விளம்பரத்தில் இறங்கியுள்ள வேட்பாளர்கள்.

பெரும்பான்மை வாக்கு கிடைக்கக் கூடாது என்று குறிப்பிட்ட நபரின் அல்லது கட்சியின் வாக்கை சிதற வைக்க களம் இறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள்.



இவ்வாறுள்ள பல ரகமான வேட்பாளர்கள் மத்தியில் உங்கள் வாக்கு யாருக்கு ??

இப்போதே சிந்தியுங்கள்!!!!

தேர்தல் வாக்குறுதிகள் விஞ்ஞாபனங்கள் வெளியிட்டு அது பற்றி கார சாரமான விவாதங்கள் மற்றும் விளக்க உரைகளும் முடிந்திருக்கு இந்த வேளையில் சிந்தியுங்கள் !!!

அவர்களின் வாக்குறுதிகள் விஞ்ஞாபனங்கள் இதுவரை ஏற்கனவே சொல்லப்பட்டவாறு நடந்ததா?

நடைமுறை நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகளுடன் ஒத்து வருமா?

ஒருமுறை சிந்தியுங்கள் !

பின்பு வாக்களியுங்கள் !

இல்லையேல் வருத்தப்படுவது நான் மட்டுமன்றி நீங்களும் தான் !!

நீங்கள் வருத்தப் படுவதை நான் விரும்பவில்லை.
என்றும் -- கணா --


Saturday, March 27, 2010

SUN தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்ச்சைகள்....

அண்மையில் இந்தியாவின் பிரபல தமிழ் SUN தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுவாமி நித்தியானந்தாவின் சர்ச்சைகள் தொடர்பான இடி முழக்கங்கள் ஓய்வதற்கு முன்பாக இன்னொரு சர்ச்சையை அதே தொலைக்காட்சி கிளப்பி உள்ளது.

சுவாமி நித்தியானதா தொடர்பாக கிளப்பப் பட்ட சர்ச்சைகள் இலங்கையில் எவரையும் பெரிதும் பாதிக்காத போதும் எல்லோருடைய கண்களின் இமைகளையும் உயர்த்த வைத்தது என்னவோ உண்மை தான்

ஆனால் இது இலங்கையில் சிலரது கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

இது பற்றி ஆராய முன் நான் உங்களுக்கு கூறிக் கொள்வது என்னவென்றால் நான் யாரையும் அக் காட்சிப்படுத்தலை பார்க்கத் தூண்டவில்லை. அத்துடன்  இந்த  விடயத்தை பிரசுரிப்பது தப்பில்லை என்று எண்ணுகிறேன் ஏனெனில் மிகவும் பிரபலமான அத்தொலைக்காட்சியில் ஒலிபரப்பப் பட்ட போது கூறிய விடயங்களை விட நான் கூறுவதில் தப்பிருக்காது .. 

நான் யாருடைய மனதையும் நோகடிக்க விரும்பவில்லை அத்துடன்
நான் யார் சார்பாகவும் பேசவும்  இல்லை
நாத்திகனும் இல்லை
எனக்குத் தெரிந்தவரையில் கூறுவது ............

அண்மையில் அந்த தொலைக்காட்சி வெளியிட்ட சுவாமி நித்தியானந்தாவின் சர்ச்சைக்கு முடிவு கட்ட முதல் அடுத்ததாக கல்கி பகவான் பற்றியும் அவர்களது ஆச்சிரமம் பற்றியும் அடுத்த சர்ச்சையைக்  கிளம்பி உள்ளது
அது தொடர்பான காட்சிப்படுத்தல்கள் மிக அண்மையில் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்ட போதும் பகவானை நம்புவோர்  பலர் அதை
பொய் என்றும்
கிராபிக்ஸ் என்றும்
தெய்வக் குற்றம் என்றும் கூறும் இந்த வேளையில்
பகவானை நம்பாதவர்கள் கேலி செய்யவும் காரணமாகிறது.

 ஒலிபரப்பப் பட்ட விடயம் என்னவென்று நான் இங்கு கூற விரும்பவில்லை காரணம் நானும் அதை ஒலிபரப்பப் போவதில்லை.

எனினும் சில விடயங்களை கூற விரும்புகின்றேன்

அதை பார்த்தவர்கள் இதையும் சிந்திக்க வேண்டும்ம்ம்ம்.....
இந்து சமயத்தை பொறுத்தவரை, நாயன்மார்கள், சித்தர்கள் பற்றி எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள்
இலங்கையில் வாழ்ந்த சில சித்தர்களை பற்றி படித்தது எனக்கு ஞாபகம் வருகிறது

பொதுவாக, அவர்களையும் மக்கள் அவர்கள் வாழும் காலங்களில் மிகவும் கேவலமாகத் தான் பார்த்தார்கள், மதிக்காது மண் கொட்டித் தூற்றினார்கள் அதை செய்ததும் இந்து சமய கொள்கைகளை பின்பற்றும் மக்கள் தான். பிற்காலங்களில்  தான் அவர்கள் உண்மையில் சித்தர்களை புரிந்து கொண்டார்கள் .

இவை அனைத்துக்கும் காரணம் அவர்களின் செயற்பாடுகள் மனநிலை பாதிக்கப் பட்டவர்கள் போலவும் மது போதைக் காரர்கள் போலவும் இருந்தது தான்

நல்லூர் அடியில் செல்லப்பா சுவாமிகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்
பின் அவரது சீடர்கள் பற்றியும் நீங்கள் கேள்விப் பட்டு இருப்பீர்கள்
அவர் வாழும் போது எல்லோரும் விசர்ச் செல்லப்பா என்று தான் அழைத்ததும் உங்களுக்கு தெரியும்.
அப்படி இருக்க இக்காட்சி மட்டும் ஏன் வித்தியாசமாத் தெரிய வேண்டும்  ? 
இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் இதில் யோசிக்க வேண்டி உள்ளது சிரிப்பதற்கோ  கேலி செய்வதற்கோ இதில் எதுவும் இல்லை ..

இன்னொரு வகையில் நோக்குவோம்ம்ம்...
சற்று விதண்டாவாதமாக.....
நம் ஆட்கள்  ஏன் மதுக்கடையில் வரிசையில் நிற்கிறார்கள் ???????????
கேட்டால் அதன் மூலம் சொர்க்கத்தை காண முடியும் என்றுதான் சொல்கிறார்கள்
அப்படி சொர்க்கத்தை காணும் மதுக்கடை நண்பர்கள் செய்வது என்ன?
அவர்களது செயற்பாடு நீங்கள் நன்கு அவதானித்ததே.
ஆகவே இறைவனை காணும் இவர்கள் ஏன் அப்படி இருக்கக் கூடாது 
அந்த இடத்திலேயே மதுக்கடை ஆச்சிரம விவகாரம்  தோற்றுப் போகிறது... 

அடுத்தது என்ன 

அலசல் தொடரும்..!!!!